வீட்டிலிருந்தே கொரோனா சோதனை செய்யும் நோக்கத்திற்காக “கோவிசெல்ஃப்” என்ற கிட்டு மற்றும் அதன் வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று வீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய ஒரு ஆலோசனையை வெளியிட்டது. அதில், எந்தவொரு மருத்துவ நிபுணரும் இல்லாமல் ஒரு நபர் தன்னை தானே பரிசோதனை செய்ய முடியும். இந்த சோதனையை எவ்வாறு செய்வது என்ற விவரங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளிட்டுள்ளது.
வீட்டு சோதனை நோக்கத்திற்காக “கோவிசெல்ஃப்” என்ற ஒரு கிட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு நாசில் துணி மட்டுமே தேவைப்படும். “கோவிசெல்ஃப்” சோதனை “18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து சுயமாக நாசில் துணியால் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து வயதானோர் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கோவிசெல்ஃப் சோதனை செய்ய சுயமாக பரிந்துரைக்கப்படாத வீட்டு பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.எம்.ஆர் தனது ஆலோசனையில், இதை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது. அறிகுறி உள்ளவர்கள் மற்றும் ஆய்வகத்தால் பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்ட உள்ளவர்கள் மட்டுமே இந்த வீட்டு அடிப்படையிலான சோதனையை செய்ய வேண்டும்.
கோவிசெல்ஃப் கிட்டை பயன்படுத்துவது எப்படி
கிட் மூலம், முழு செயல்முறையையும் விவரிக்கும் ஒரு கையேடு வரும். ஐ.சி.எம்.ஆர் பயனர்களின் வசதிக்காக வீடியோ இணைப்புகளை வழங்கியுள்ளது, அங்கு இருந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் சேர்த்து ஒரு நாசில் துணி மற்றும் ஒரு முன் நிரப்பப்பட்ட பிரித்தெடுத்தல் குழாய் மற்றும் ஒரு சோதனை அட்டை இருக்கும்.
இந்த சோதனையை செய்ய பயனர்கள் தங்கள் மொபைலில் mylab app செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
இந்த புதிய ஆர்டி-பி.சி.ஆர் கிட் 97.3% மாற்றமடைந்து கொரோனாவை கணடறியும் செயல்திறன் கொண்டுள்ளது : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
மூக்கினுள் செல்லும் அந்த குச்சி போன்ற பகுதியின் தலையை தொடாமல் ,இரண்டு நாசிக்குள் 2 முதல் 3 சென்டிமீட்டர் வரை செருக வேண்டும். ஒவ்வொரு நாசிக்குள் ஐந்து முறை அதை மெதுவாக சுழற்ற வேண்டும்.
நாசில் துணியை மூக்கிலிருந்து எடுத்த பின்பு கொடுக்கப்பட்டுள்ள குழாயில் முழுமையாக உள்ளே விட வேண்டும்.பின்பு நாசி துணியை 10 முறை சுழற்று வேண்டும், குழாயில் நன்றாக பொருந்தி இருப்பதை உறுதி செய்யுங்கள்.
இடைவெளியை பிரேக் பாயிண்டிலிருந்து உடைக்க வேண்டும்.குழாயை மூடி, அழுத்துவதன் மூலம் இரண்டு சொட்டுகளை சோதனை கருவியில் சேர்க்க வேண்டும்.முடிவுகள் தோன்றுவதற்கு ஒருவர் 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு தோன்றும் எந்த முடிவும் செல்லாது என்று கருதப்படுகிற
இதற்கான முடிவுகள் 15 நிமிடத்தில் mylab app செயலியில் ஒலி எழுப்பட்டு பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்.
ஐசிஎம்ஆர் அதன் வழிகாட்டுதலில் மொபைல் ஆப் டேட்டா ஐசிஎம்ஆர் கொரோனா சோதனை போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளது,மேலும் இது பாதுகாப்பான சேவையகத்துடன் இணைக்கப்படும் என்று கூறியுள்ளது. நோயாளியின் ரகசியத்தன்மைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
பாசிட்டிவ் உள்ள அனைவருக்கும் கூடுதல் சோதனை தேவையில்லை, ஏனெனில் இந்த சுய சோதனை உண்மையான முடிவுகளாக கருதப்படும். இத்தகைய எதிர்மறை முடிவுகள் வந்தால் அவர்களுக்கும் கொரோனா இருக்க வாய்ப்புள்ளது.நெகட்டிவ் உள்ளவர்கள் RT-PCR சோதனையைத் தேர்வுசெய்யலாம்.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…