நீட் , ஜேஇஇ தேர்வை நடத்துவது குறித்து அரசு, மாணவர்களிடம் கேட்டு ஒருமித்த கருத்தினை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழலில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை செப்டம்பர் மாதம் நடத்த தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாங்கத்தின் தோல்விகள் காரணமாக நீட், ஜேஇஇ தேர்வு எழுதுபவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கூடாது என காங்கிரசின் முன்னால் தலைவரான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டரில் வீடியோ பதிவை போட்டுள்ளார். அதில், நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம், நீங்கள் மாணவர்கள், நீங்கள் இந்த நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறீர்கள். இப்படி இருக்கையில், எனக்குப் புரியாதது என்னவென்றால், நீங்கள் ஏன் அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏன் உங்கள் மீது மேலும் திணிக்கப்படும் வலிகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்? என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் அரசு, மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியது. 6 மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். ஆனால் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…