2வது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக 255 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனால், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது.
25ம் தேதி பதவியேற்பு:
இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவி ஏற்க உள்ளார். லக்னோவில் உள்ள அட்டல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். டெல்லியில் யோகி ஆதித்யநாத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை நேரில் சென்று பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், யோகி ஆதித்யநாத் புதிய அமைச்சரவை 45-க்கும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…