கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பிடித்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத் 2017, மார்ச் 19ல் உத்தரபிரதேசத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் யோகி பொறுப்பேற்ற ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. பின்னர் தோல்வியிலிருந்து பாடம் கற்று கொண்டதாக யோகி தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், 62 தொகுதிகளை பாஜக கைபற்றியது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி யோகி தனது 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதற்கு முன் பாஜக முதல்வர்களாக இருந்த கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் முழுமையாக 3 ஆண்டுகளை முதல்வராக இருந்து நிறைவு செய்யவில்லை. இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் 3 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர் என்ற சாதனையை யோகி பெறுகிறார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…