கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பிடித்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத் 2017, மார்ச் 19ல் உத்தரபிரதேசத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் யோகி பொறுப்பேற்ற ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. பின்னர் தோல்வியிலிருந்து பாடம் கற்று கொண்டதாக யோகி தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், 62 தொகுதிகளை பாஜக கைபற்றியது. இந்த நிலையில் வரும் 19ம் தேதி யோகி தனது 3 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதற்கு முன் பாஜக முதல்வர்களாக இருந்த கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் முழுமையாக 3 ஆண்டுகளை முதல்வராக இருந்து நிறைவு செய்யவில்லை. இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் 3 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர் என்ற சாதனையை யோகி பெறுகிறார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…