உத்திர பிரதேச மாநிலத்தில அயோத்தியில் சுமார் 221 மீ உயரம் உடைய ராமர் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் உள்ளது அயோத்தி இது ராமரின் பிறப்பபிடமாக போற்றப்படுகிறது.இந்நிலையில் அங்கு கோயில் கட்டுவது தொடர்பாக நீண்ட நாள்களாக சர்ச்சை நீடித்து வருகிறது.இந்நிலையில் ராமர் பிறந்த இடத்தில் அங்கு கோவிலை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, போடப்பட்டது.இந்த வழக்கினனை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.வழக்கு நடந்து வரும் நிலையில் உத்திரபிரதேச மாநில முதல்வர் அயோத்தியில் பகபவான் ராமருக்கு மிக பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் ராமர் கோவில் விவகாரத்தில் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் உத்திர பிரதேச அரசின் முதன்மை செயலளாரான அவினாஸ் அவஸ்தி இது குறித்து தெரிவிக்கையில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் 221 மீட்டர் உயரத்தில் வெண்கலத்தில் சிலை அமைக்கப்பட இருக்கின்றது. மேலும் அமைக்கப்படும் ராமர் சிலையினுடைய பாதங்களுக்கு கீழ் 50 மீ பீடம் அதன் மேல் 151 மீ உயரத்தில் ஒரு முழுஉருவ வெண்கல சிலை மற்றும் 20 மீ., உயரத்திலான ஒரு குடை வடிவமைக்கப்பட இருக்கிறது.மேலும் ராமர் சிலைக்கு கீழே அமையும் அடித்தளத்தில் அயோத்தியின் வரலாறு மற்றும் ராமரின் ஜென்மபூமியின் பின்னணி குறித்த விவரங்களை உள்ளடக்கிய விளக்கமும்,ஒரு நவீன அருங்காட்சியகமும் மற்றும் விஷ்ணுவின் அனைத்து விதமான அவதாரங்களை குறித்த விரிவான விளக்கங்கள் இடம்பெறும். இவ்வாரு தெரிவித்த அவர் ராமர் சிலை அமைப்பதற்கான ஏற்ற இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் மண் மற்றும் காற்று ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…