முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பாதுகாப்பு..!

Published by
murugan

பாஜக சார்பில் போட்டியிடும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, வருகின்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மோய்னாப் தொகுதியில் பாஜக சார்பில் அசோக் திண்டா போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டபோது அடையாளம் தெரியாத நபர்களால் அசோக் திண்டா தாக்கப்பட்டார். அவரது கார் குச்சிகள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் டிண்டாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது கார் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக டிண்டா ஒரு வீடியோ மற்றும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தனது காரும், தானும் செங்கற்களால் தாக்கப்பட்டதாக இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியதாக குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது. இந்நிலையில், அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Published by
murugan

Recent Posts

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

1 hour ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

3 hours ago