Categories: இந்தியா

உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை இன்று திறப்பு!

Published by
கெளதம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் Dr. BR அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு இன்று விஜயவாடாவில் திறக்கவுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள இந்த சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கிறார்.

சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு ‘ஸ்மிருதி வனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. ரூ. 404.35 கோடி செலவில் உருவான இந்த சிலை 18.81 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் வாழ்க்கையை காட்சிப்படுத்த எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8,000 சதுர அடியில் உணவு மைதானம் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் ஆகியவையும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் துயரம்! படகு கவிழ்ந்து 16 பேர் பலி!

தரையில் இருந்து 175 அடி உயரமுள்ள இரண்டாவது அம்பேத்கர் சிலை அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, மிக உயரமான அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலாந்தில் திறக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

5 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

6 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

6 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

7 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

8 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

9 hours ago