இந்தியாவில் உடலுறுப்பு தானமானது விருப்பமுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் விருப்ப தேர்வாக உடல் உறுப்பு தனம் இருக்கும் எனவும், இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என பாஜக எம்பி தெரிவித்தார்.
நேற்று உலக உடலுறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பாஜக எம்பி வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அதில், உடல் உறுப்பு தானம் பற்றிய மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் பலரது உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் பற்றிய மசோதாவை இவர் பாராளுமன்றத்தில் தாக்கல் வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யஉள்ளார். இந்த மசோதா ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாதம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.
உடல் உறுப்பு தானத்தை கட்டாயமாக்க அதற்கு வலுவான கொள்கைகள் இந்தியாவில் இல்லாததால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 2 லட்சம் சிறுநீரகங்கள், 50,000 இருதயங்கள் மற்றும் 50000 மாற்று கல்லீரல்கள் ஆகியவை தேவைப்படுவதாக அவர் கூறினார். இறந்தவர்களிடம் இருந்து உறுப்பு தானம் மிகவும் குறைவாகவே எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் உடலுறுப்பு தானமானது விருப்பமுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. அதற்கு பதிலாக தற்போதைய மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் விருப்ப தேர்வாக உடல் உறுப்பு தனம் இருக்கும் எனவும், இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என அவர் தெரிவித்தார். இதன்மூலம் உறுப்பு தானத்தின் நன்கொடையாளர்களின் வீதத்தை அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…