பெனகாடியா என்ற ஊரில் உள்ள ஒரு பாலத்தின் மீது ரயில் மெதுவாகச் சென்றபோது, இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து தப்பி ஓடினர்.
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 67,152 பாதிப்புகளும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரயில், பெனகாடியா என்ற ஊரில் உள்ள ஒரு பாலத்தின் மீது மெதுவாகச் சென்றபோது, இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து தப்பி ஓடினர்.
பின்னர், அந்த ஊர்மக்கள் 7 பேரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கீழே குதித்தவர்களில் 20 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். ஒடிசாவில் வெளிமாநிலத் தொழிலாளர்களை 28 நாட்கள் முகாமில் தனிமையில் வைப்பது கட்டாயமாகி உள்ளது. இதனால் தான் தொழிலார்கள் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து உள்ளனர்.
ஒடிசாவில் கொரோனாவால் 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 63 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 2 உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 10 மாநிலங்களில் ஒடிசா மாநிலமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…