பெனகாடியா என்ற ஊரில் உள்ள ஒரு பாலத்தின் மீது ரயில் மெதுவாகச் சென்றபோது, இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து தப்பி ஓடினர்.
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 67,152 பாதிப்புகளும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20917 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரயில் மூலம் தொழிலாளர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரயில், பெனகாடியா என்ற ஊரில் உள்ள ஒரு பாலத்தின் மீது மெதுவாகச் சென்றபோது, இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குதித்து தப்பி ஓடினர்.
பின்னர், அந்த ஊர்மக்கள் 7 பேரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கீழே குதித்தவர்களில் 20 பேர் தப்பிச் சென்றுவிட்டனர். ஒடிசாவில் வெளிமாநிலத் தொழிலாளர்களை 28 நாட்கள் முகாமில் தனிமையில் வைப்பது கட்டாயமாகி உள்ளது. இதனால் தான் தொழிலார்கள் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து உள்ளனர்.
ஒடிசாவில் கொரோனாவால் 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 63 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 2 உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத 10 மாநிலங்களில் ஒடிசா மாநிலமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…