PMModi [Image source : ANI]
ஒற்றுமையும், அமைதியும் நிறைந்த தேசத்தை இலட்சியமாகக் கொண்டு உழைத்த மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி இன்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி, காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், மகாத்மா காந்திக்கு தலை வணங்குகிறேன்.
மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது, அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒற்றுமை, இரக்க உணர்வை மேலும் வளர்க்க தூண்டுகிறது. எனவே, மகாத்மா காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். காந்தியின் எண்ணங்கள் நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும் என்றுள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…