பெண்களுக்கு கருக்கலைப்பு சட்டப்படி தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமை உள்ளது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், அவரது வயிற்றில் வளர்ந்து வரக்கூடிய சிசு குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 22 வாரங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்த சிசுவை கலைப்பதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பார்வைத்திறன் குறைபாடு உள்ளதோடு அவரது இடது கால் செயலிழந்து நடக்க முடியாத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்த கேரள உயர் நீதிமன்றம், கர்ப்பிணியின் வயிற்றில் வளரக்கூடிய 22 வார சிசுவுக்கு கிளைன்ஃபெல்டா் எனும் மரபணு கோளாறு உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரைக் கொல்லும் அளவுக்கு இந்த குறைபாடு அபாயகரமானதாக இல்லாவிட்டாலும், குறைபாடு கொண்ட அந்த குழந்தை வளரும் போது அதன் தேவையைப் புரிந்து கொள்வதில் தாய்க்கு சிரமம் ஏற்படும்.
எனவே கருவை வைத்துக் கொள்வதா அல்லது கலைப்பதா என்பது குறித்து முடிவு செய்யக் கூடிய உரிமை பெண்களுக்கு உள்ளது எனவும், கருக்கலைப்பு சட்டப்படி குறிப்பிட்ட வாரத்தில் வயிற்றில் வளரக்கூடிய சிசுவை கலைப்பதற்கு தாயாருக்கு உரிமை உள்ளது எனவும், வயிற்றில் வளர கூடிய சிசு குறைபாடுடன் இருந்தால் அதை கலைப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கோரியிருந்தபடி அந்த பெண்ணின் வயிற்றில் வளர கூடிய 22 வார கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…