கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உண்டு – கேரள உயர்நீதிமன்றம்!

Published by
Rebekal

பெண்களுக்கு கருக்கலைப்பு சட்டப்படி தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமை உள்ளது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், அவரது வயிற்றில் வளர்ந்து வரக்கூடிய சிசு குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 22 வாரங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்த சிசுவை கலைப்பதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பார்வைத்திறன் குறைபாடு உள்ளதோடு அவரது இடது கால் செயலிழந்து நடக்க முடியாத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்த கேரள உயர் நீதிமன்றம், கர்ப்பிணியின் வயிற்றில் வளரக்கூடிய 22 வார சிசுவுக்கு கிளைன்ஃபெல்டா் எனும் மரபணு கோளாறு உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரைக் கொல்லும் அளவுக்கு இந்த குறைபாடு அபாயகரமானதாக இல்லாவிட்டாலும், குறைபாடு கொண்ட அந்த குழந்தை வளரும் போது அதன் தேவையைப் புரிந்து கொள்வதில் தாய்க்கு சிரமம் ஏற்படும்.

எனவே கருவை வைத்துக் கொள்வதா அல்லது கலைப்பதா என்பது குறித்து முடிவு செய்யக் கூடிய உரிமை பெண்களுக்கு உள்ளது எனவும், கருக்கலைப்பு சட்டப்படி குறிப்பிட்ட வாரத்தில் வயிற்றில் வளரக்கூடிய சிசுவை கலைப்பதற்கு தாயாருக்கு உரிமை உள்ளது எனவும், வயிற்றில் வளர கூடிய சிசு குறைபாடுடன் இருந்தால் அதை கலைப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கோரியிருந்தபடி அந்த பெண்ணின் வயிற்றில் வளர கூடிய 22 வார கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

1 hour ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

3 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

3 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

4 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

4 hours ago