கடற்கரையில் நிர்வானமான நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்!அறுக்கப்பட்ட தலைமுடி!விரைந்து செயல்பட்ட காவல்துறையினர்!

Published by
Sulai
  • கடற்கரையில் நிர்வாணமான நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்.தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தில் பலத்த காயங்கள் இருந்துள்ளன.
  • பின்னர் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரன் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் ஆவார்.இவரது மனைவி ரூபஸ்ரீ ஆவார்.இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 16-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்றவர் திரும்ப வீடு திரும்பவில்லை.இதனால் கணவரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர்.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மஞ்சேஸ்வரம் கடற்கரையில் நிர்வானமான நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் காணாமல் போன ரூபஸ்ரீ என்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் அவரது தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இருந்துள்ளது.பின்னர் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், ரூபஸ்ரீயின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது ரூபஸ்ரீ ,கடைசியாக வெங்கடராமன் என்பவரிடம் பேசியது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து வேங்கட்ராமனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர் வேலைக்கு சேர்ந்த வருடத்தில் தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்துள்ளதால் நட்பாக பழகியதாக கூறியுள்ளார்.

மேலும் ஒரே பள்ளி என்பதால் அவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரூபஸ்ரீயை சந்தித்து அடிக்கடி தொந்தரவு செய்ததாகவும் சம்பவத்தன்று ரூபஸ்ரீ வீட்டுக்கு சென்றதாவும் கூறியுள்ளார்.

பின்னர் அவருடன் தகராறில் ஈடுபட்ட போது அவரை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாகவும் பின்னர் அவரது சடலத்தை காரில் எடுத்து சென்று கடலில் வீசியதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் வெங்கட்ராமணிடம் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

1 hour ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

1 hour ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

1 hour ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

4 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

4 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

5 hours ago