மஹாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி அமைத்துவருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா மாணவர்கள் போலீசார் நடத்திய தடியடி சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறினார்.
இதை தொடர்ந்து கடந்த 19ம் தேதி ஹிராமனி திவாரி என்ற வாலிபர் “ராகுல் திவாரி” என்ற பெயரில் உள்ள முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் உத்தவ் தாக்கரேயை விமா்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு வந்ததை மிரட்டல்கள் தொடர்ந்து அந்த பதிவை முகநூலில் இருந்து நீக்கினார்.
பின்னர் சிவசேனாவினர் ஹிராமனி திவாரியின் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி , அவருக்கு மொட்டை அடித்து உள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிவசேனாவின் பெண் தொண்டர் ஒருவர், உத்தவ் தாக்கரேக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது மை ஊற்றினார். ஆனால் அந்த நபரோ அதை கண்டு கொள்ளமல் யாருடனோ போனில் பேசி கொண்டு இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…