அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது.
அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத 5 ஆண்கள் ஒரு சிறுமியை அடித்து சித்திரவதை செய்கின்றனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள 5 குற்றவாளிகளின் புகைப்படங்களையும் அசாம் காவல்துறை வெளியிட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடம் இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு இந்த குற்றவாளிகளைப் பற்றிய ஏதேனும் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேரை, காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கர்நாடகா காவல் ஆணையர் கமல்நாத் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவின் காட்சிகளைப் பகிர்ந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து வியாழக்கிழமை அசாம் காவல்துறை தகவல் அளித்தது. இந்த வீடியோ மற்றும் விசாரணையின் அடிப்படையில், இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…