150 ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக இந்தியாவில் பெண்ணுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு!

Published by
Rebekal

இந்தியா சுதந்திரம் அடைந்து 150 ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை, ஆனால் முதன்முறையாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அம்ரோகா மாவட்டத்தில் பவன்கேதா எனும் கிராமத்தில் வசித்து வரக்கூடிய பள்ளி ஆசிரியரான சவுகத் அலி என்பவரின் மகள்தான் ஷப்னம். வரலாறு மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரி ஷப்னம் கூலித்தொழிலாளி சலீம் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தனது கள்ளக்காதலனுடன் சலீம் உடன் சேர்ந்து ஷப்னம் அவரது தந்தை, தாய் அண்ணன் மகனான பத்து மாத கைக்குழந்தை உள்ளிட்ட தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்திருந்தார். இந்த வழக்கில் ஷப்னம் மற்றும் அவரது கள்ளக்காதலன் சலீம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களிடம் இது குறித்து விசாரித்த பொழுது இவர்களின் கள்ளக்காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் இவ்வாறு செய்ததாக உண்மையை கூறியுள்ளனர்.

மேலும் குடும்பத்தினர் அனைவருக்கும் முதலில் விஷம் கலந்த உணவு கொடுத்து அவர்கள் மயக்கம் அடைந்த பின்பு கோடாரியால் ஒவ்வொருவரையும் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்துள்ளார் ஷப்னம். தனது தாய் தந்தை என்று கூட பாராமல் கொலை செய்த ஷப்னம் மற்றும் அவரது கள்ளக்காதலன் சலீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் இவருக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு தற்பொழுது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவரது கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

அதுவும் தற்பொழுது நிராகரிக்கப்பட்டு, அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியிருக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் முதல்முறையாக தூக்கு தண்டனை பெறப்போகும் பெண்மணி ஷப்னம் தான். 150 ஆண்டுகள் பழமையான மதுராவில் உள்ள சிறைச்சாலையில் தான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறதாம். இன்னும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டாததால் சரியாக தூக்கிலிடப்படும் நாள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தூக்குக் கயிறு பீகாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப் பட்டு விட்டதாகவும் சிறைத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago