சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர்…! மரக்கூட்டம் பகுதியில் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்…!

Default Image

சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும், மரக்கூட்டம் பகுதியில் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்.
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.இந்நிலையில் இன்று கோயில் நடைதிறக்கும் நிலையில்,கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
ஆனால் கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள்.
Image result for sabarimala protest
 
அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.
இன்றும் சபரிமலை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.இன்று நியூயார்க் டைம்ஸ் பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும் சபரிமலை கோவிலுக்கு வழிபட சென்றனர்.ஆனால் சபரிமலை கோவிலில் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பெண் பத்திரிகையாளர் செல்ல எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையுடன் ஐயப்ப பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளரும் அவரது வெளிநாட்டு தோழியும், மரக்கூட்டம் பகுதியில் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்ப சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்