ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண்…!

Published by
லீனா

ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பலரும் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், புனேவில் அகன்ஷா சடேகர் என்ற பெண் தினசரி 7,000 பேருக்கு உணவுகளை இலவசமாய் வழங்கி வருகிறார். காஷிபாய் நவலே மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பயிற்சியாளராக அவரது சகோதரர் சோஹம் பணியாற்றி வருகிறார். இவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தான்  இந்த பணியை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் அவரது சகோதரர் உணவை உட்கொள்வதற்கு பல சிரமங்களை எதிர் கொள்கிறார். இதனை பார்த்த இவர் 2020 நவம்பரிலிருந்து தினசரி டிபன் வழங்க முடிவு செய்தார். இவர் இலவசமாக உணவு வழங்குவது பிரபலமாக தெரியவந்த நிலையில், தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டிபன்களை வழங்கி வந்தார்.

COVID-19 ஐ கட்டுப்படுத்த அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்திய போது, ட்வீட்டர் பக்கத்தில் ஒருவர் 12 மணி நேரமாக காத்திருந்து உணவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் ஆன்லைன் மூலமாகவும்  உணவை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற பதிவினை பார்த்தார். இதனை பார்த்த அவர் அந்த நபருக்கு உதவி செய்துள்ளார்.

இவரது இந்த செயல் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அகன்ஷா சடேகரிடம் தங்களது உணவு தேவையை குறித்து தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அகன்ஷாவின் வீட்டு சமையலறை மிகவும் சிறியதாக இருந்தது. எனவே கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட உணவகங்களை சிலவற்றை அணுகி அந்த உணவகங்கள் மூலமாக உணவுகளை தயார் செய்து வழங்கத் தொடங்கினார்.  உணவை வழங்கும் போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துவதுண்டு.

அவர்களிடம் தனது பணியை குறித்து கூறிவிட்டு, போலீசார் மூலமாகவே தெருவில் வசிப்போருக்கு உணவுகளை வழங்கி வந்தார். மேலும் தெருவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தங்களது பணி நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் காணப்படும் காவல்துறையினருக்கும் உணவு பொட்டலங்களை வழங்க வழங்கியுள்ளார். பின் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிட்டத்தட்ட 2500 பேருக்கு உணவு  வழங்குகின்றார்.

அகன்ஷா, தனது நண்பர்களான குஜராத்தைச் சேர்ந்த மாத்தூர் சர்மாவுடன் சமீபத்தில் புருஷோத்தம் மாலதி அறக்கட்டளையை அமைத்து, தொடர்ந்து அதிகரித்து வரும் உணவைப் பூர்த்தி செய்ய நன்கொடை திரட்டி வருகிறார். அதன்படி, ரூ.15 லட்சம் திரட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து இலவசமாக உணவை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா
Tags: akanshaFood

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago