மகாராஷ்டிராவில் வேலையின்றி வருமானமின்றி தவித்ததால் திருமண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அவுரங்காபாத்தை சேர்ந்த 27 வயது பெண் மகாராஷ்டிராவில் திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றியதை அடுத்து சனிக்கிழமையன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அதில் ஏமாறிய ஒருவரான யோகேஷ் ஷிர்ஷாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் வெளிக்கு வந்தது .கொரோனா காரணமாக வேலையிழந்த பெண்ணான விஜயா அம்ருத் நிதி நெருக்கடியின் காரணமாக திருமண மோசடியில் இறங்கியதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மூன்று பேரை திருமணம் செய்துள்ளதாகவும்,திருமணமான சில நாட்களில் விலைமதிப்புள்ள பொருட்களுடன் தப்பித்து ஓடி விடுவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதில் முதலில் லோகேஷ் அவர்களை மணந்த அம்ருத் அடுத்த 15 நாட்களில் அவரிடமிருந்து ஆபரணங்களை எடுத்து கொண்டு தப்பியுள்ளார்.அதனையடுத்து ரோகாட்டின் கர்ஜாட்டில் வசிக்கும் சந்தீப் தாரடே என்பவரையும்,அதன் பிறகு மேற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரையும் ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.இதில் லோகேஷ் தனது மனைவியை காணவில்லை என தேடிய போது தான்,பெண் பலரையும் ஏமாற்றுவது தெரிய வந்ததாகவும், அதனையடுத்து புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…