விடுமுறையின்றி செப்.. 14 முதல் அக். 1ஆம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.!

Published by
Ragi

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக எந்த விடுமுறையும் இன்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், நடப்பாண்டில் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் தொடர் முடிந்து ஏறக்குறைய 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 18 அமர்வுகள் நடத்தப்படும் என்றும், எந்த விடுமுறையும் இல்லை என்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு பல கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவிலிருந்து பாதுகாக்க உறுப்பினர்களின் இருக்கைகள் சமூக இடைவெளியுடனும், பார்வையாளர் மாடங்களிலும் உறுப்பினர்கள் அமர்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் நடைபெறும் அவை நிகழ்வுகளுக்காக பிரமாண்ட திரைகள் உட்பட சிறப்பு ஒலி அமைப்புகள் என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Published by
Ragi

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

22 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

57 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

1 hour ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago