மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா நிதிஷ்குமார்? வெளியான பரபரப்பு தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

அதன்படி, 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ 43 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால், பீகாரில் பாஜக, ஜேடியூ மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமரனார்.

இதன்பின், கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுடனான கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி விலகிய நிலையில், லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் கைகோர்த்தார். இதனால், ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த சூழலில் வரும் நாடாளுமன்ற மக்களவையில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று ஒன்றை குறிக்கோளுடன் இருக்கும் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார்.

40 வருடத்திற்கு பிறகு சாரட் வண்டியில் வந்த இந்திய ஜனாதிபதி…!

அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவானது. இதில், நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா கூட்டணியின் முதல் கூட்டமே பாட்னாவில் தான் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால், சமீபகாலமாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மீது நிதிஷ்குமாருக்கு அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியானது.

இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை தேர்வு செய்ய நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் தொடர்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில் குறிப்பாக ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறி பாஜகவுடன் மீண்டும் கைகோர்ப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், பாஜக ஆதரவுடன் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்றும் சுஷில் மோடிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பீகார் மாநில சட்டசபையை கலைப்பது தொடர்பாக நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கைகள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்தியா கூட்டணியில் தான்..

Recent Posts

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!

சென்னை :   தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

18 minutes ago

உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!

சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…

43 minutes ago

இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…

2 hours ago

RRvsCSK : சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சென்னை… தோல்வியில் இருந்து மீளுமா?

குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…

2 hours ago

ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை…எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு…

2 hours ago

SRHvDC : 300 அடிக்குமா ஹைதராபாத்? கடப்பாரை பேட்டிங்கின் அதிரடியை சமாளிக்குமா டெல்லி?

விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…

3 hours ago