கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் வந்த கேரளா தான்.முதலில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 1078 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,111 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9468-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,164 பேர் குணமடைந்து உள்ளனர்.
ஒரு நாளைக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகின்ற திங்கள் கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான இறுதி முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் முழு முடக்கம் அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…