ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்தின் கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், முகமது ஆரிப் (26), சிந்தகுந்தா சென்னகேசவுலு (20), ஜொலு சிவா (20), ஜொலு நவீன் (20) என்ற நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் பிரியங்கா ரெட்டியை எரித்து கொன்ற இடத்தில், அந்த நான்கு பேரையும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை சுட்டு கொன்றதாக காவல் துறையினர் கூறினார்.
இந்நிலையில், நடிகர் விவேக் இந்த என்கவுன்டர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் அவர், நீதி கிடைத்துவிட்டது. அந்த மருத்துவ சகோதரியின் ஆத்மா சாந்தியடையும். வெறிபிடித்த அனைத்து வக்கிரங்களுக்கும் இந்த சம்பவம் ஒரு பாடம் பிடிக்கும்! இந்த கடுமையான நடவடிக்கைக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பெரிய வணக்கம். என பதிவிட்டிருந்தார்.
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…