ராஜஸ்தானில் இருக்கும் புலிகள் சரணாலயத்தில் காட்டுத்தீ..!

Default Image

ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 2,000 ஹெக்டேர் பரப்புடைய பகுதிகள் எரிந்து போய்விட்டது. இந்த சரணாலயத்தை சுற்றி சுமார் 24 கிராமங்கள் உள்ளது. அதில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது அங்கு வெயில் கடுமையாக இருப்பதால் அங்கிருக்கும் மரங்கள் காய்ந்து இருக்கிறது. இதனால் காட்டுத்தீ தற்போது ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து  தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து சாதாரணமானது அல்ல. இந்த ஆண்டில் தீயின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் தீயின் காரணத்தால் காப்பகத்திற்கு மாறி இருக்கின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாததால், அங்கிருக்கும் மனிதர்கள் மட்டுமில்லாமல் விலங்குகள், பறவைகள், மரங்கள் என பெருத்த சேதம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்