தேர்வில் ஏமாற்ற புளூடூத்துடன் அணிந்திருந்த விக் – UP மாணவரை பிடித்த போலீஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இன்ஸ்பெக்டர் மெயின் தேர்வில் நூதன முறையில் ஏமாற்ற முயற்சி செய்த இளைஞரை பிடித்த போலீஸ்.

அரசுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் வழக்கமான காலியிடங்கள் மற்றும் தேர்வுகளை நடத்தக்கோரி சம்பந்தப்பட்ட மாநில அல்லது மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது,அதில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட நூதன மோசடியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உ.பி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்களை போலீசார் சோதனை செய்தனர்.அப்பொழுது 27 வயதுடைய இளைஞரை சோதனை செய்ததில் அவர் புளூடூத்து அமைப்புடன் தலையில் விக் அணிந்திருந்ததையும், காதில் இயர்போன் அணிந்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.இவர் தேர்வில் ஏமாற்ற ஒரு நூதன முயற்சியை மேற்கொண்ட செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த மாணவனின் காதுக்குள் இருந்த இரண்டு ஏர்போட்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால், அதை அந்த மாணவனின் காதில் இருந்து போலீசாரால் அகற்ற முடியவில்லை. இதுகுறித்த வீடீயோவை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மெயின் தேர்வுவில் நடத்த சீட்டிங் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பலர் பகிர்ந்து வருகின்றன. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ராஜஸ்தான் போலீசார் தேர்வின் போது ப்ளூடூத் கருவிகள் பொருத்தப்பட்ட செருப்புகளை அணிந்திருந்த 6 மாணவர்களை போலீசார் பிடித்தனர். இந்த தேர்வின்போது முதலில் ஒருவரை பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் மேலும் ஐந்து மாணவர்களை பிடித்ததாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

8 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

9 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago