Arvind Kejriwal [file image]
அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலைமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்து இருந்தது. மேலும், இதனை தொடர்ந்து சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனால், இன்றைய நாளில் இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதில் மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ என்னை கைது செய்து சிறையில் அடைத்தது எல்லாமே சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.
இதானல், சிபிஐ அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதன்பின் தொடர்ந்து இந்த வழக்கை தீர விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து இது தொடர்பான விசாரணையை வரும் ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஏற்கனவே ஜூலை- 3 வரை நீதிமன்ற காவலில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் இருந்து கடந்த ஜூன் 23 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…