நிதி மோசடி குறித்து விசாரிப்பதை தடுப்பது ஏன்? – மம்தா பானர்ஜியிடம் மத்திய அமைச்சர் கேள்வி…!!

Published by
Dinasuvadu desk

நிதி மோசடி குறித்து காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதை தடுப்பது ஏன்? என்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்த கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய சட்டத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். நிதி நிறுவன மோசடி குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ மூன்று முறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் பதிலளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மதன் மித்ரா, சுதிப் மற்றும் இரண்டு எம்.பிக்கள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டிய ரவி சங்கர் பிரசாத், அப்போது எல்லாம் அமைதியாக இருந்துவிட்டு காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை நடத்த முயலும்போது அதை மம்தா பானர்ஜி தடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஊழல் கூட்டணி மூலம் தங்களை காத்துக்கொள்ள முயல்வதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.

இதேபோல், இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஊழல்வாதிகளை காப்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தும் போராட்டம் மக்களிடம் எடுபடாது என்றும் ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க எனக் கூறினார்.

மம்தா பானர்ஜியின் தர்ணா குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து தெரிவிக்கையில், பிரதமர் வேட்பாளர் என்ற இலக்கை மனதில் வைத்தே, மம்தா பானர்ஜி இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago