பிரதமரின் சொகுசு விமானத்தை ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை.. ராகுல்காந்தி ..!

Default Image

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் 3 நாள் டிராக்டர் பேரணி கடந்த 4-ம் தேதி தொடங்கி மூன்று நாள் நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டார்.

இந்த பேரணியில் ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து, குஜராத் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆட்சிக்கு வரும் ராகுல்காந்தியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்தி உள்ளார். அவரை போன்ற வி.ஐ.பி. விவசாயிகளால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்றார்.

இந்நிலையில்,  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் குறித்து பேசிய, ராகுல்காந்தி, என் நலம் விரும்பியா யாரோ ஒருவர் டிராக்டரில் சோபாவை வைத்துள்ளார். ஆனால்,  பிரதமரின் பயன்பாட்டுக்காக ரூ.8,000 கோடிக்கு புதிய ஏர் இந்தியா ஒன் விமானம் வாங்கப்பட்டுள்ளது. அதில், சோபா மட்டுமல்லாமல், சொகுசு படுக்கைகளே உள்ளது.

அதை ஏன் யாரும் பார்ப்பதும் இல்லை, கேள்வி கேட்பதும் இல்லை என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்