பிரதமர் மோடி நடத்தை விதிகளை மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
காரக்பூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், கடந்த மக்களவை தேர்தலின் போது வங்கதேச நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக இதுகுறித்து வங்கதேச அரசுடன் பேசி அந்த நடிகரின் விசாவை ரத்து செய்தது.
தற்போது மேற்கு வங்கத்தில் சட்ட பேரவைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். விதிமீறல் குறித்து பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்க உள்ளோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் வங்காள தேச தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி வங்காள தேசம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…