பாதுகாப்பை நீக்கியது ஏன் ? மக்களவையில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

Default Image

சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு நீக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை திருப்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.மக்களவையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கான எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த விவகாரம் இன்று நடைபெற்ற மக்களவையில் எதிரொலித்தது.பாதுகாப்பை வாபஸ் பெறப்பட்டதற்கு எதிராக  காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.இதனை அடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்