ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை 526 கோடி ரூபாயாக நிர்ணயிக்குப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறினார்.
ஆனால், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பிறகு, ரஃபேல் போர் விமானம் ஒன்றின் விலை ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த விலைக்கு வாங்க பாஜக அரசு முடிவு செய்தது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 36 ஆக குறைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, இன்று வரை ஒரு ரஃபேல் போர் விமானம் கூட இந்தியாவிற்கு வரவில்லை என்றார். அனில் அம்பானி 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ள ஒரு தொழிலதிபர் என்றும் அவர் வினவினார்.
ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட 10 நாட்களில் உரிமம் கொடுத்தது ஏன், அரசு நிறுவனமான ஹெ.ஏ.எல்லிற்கு கொடுக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தது ஏன் என்றும் ராகுல்காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…