மிகவும் எதிர்பார்க்கப்படும் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதில், இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மாற்று 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 63.31% வாக்கு பதிவாகியுள்ளது. இரண்டாம் தேர்தலில் 59% வாக்குகள் பதிவாகியுள்ளது.
குஜராத்தில் மாநிலத்தில் மொத்தமுள்ள 183 தொகுதிகளில் ஆட்சியமைக்க 92 இடங்கள் அவசியம். இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. குஜராத்தில் இம்முறையும் பாஜகத்தான் ஆட்சியை கைப்பற்றும் என்றும் 2வது இடத்தை காங்கிரஸும், 3வது இடத்தை ஆம் ஆத்மியும் பிடிக்கும் என கூறப்படுகிறது.
இதுபோன்று இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆட்சி மாறும் வரலாறும் உண்டு.
ஆம் ஆத்மி களமிறங்கியதால் இரு மாநிலத்திலும் மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், இரண்டு மாநிலங்களிலும் பாஜகவுக்கு வெற்றி என கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கின்றன. இருந்தாலும், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் இமாச்சல், குஜராத்தில் வெற்றி யாருக்கு? என தெரிந்துவிடும்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…