ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கான போட்டியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் இருக்கிறார்.
கடந்த 6 ம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாக இருப்பதால் அங்கு ஆளுநர் தேவையில்லை.
ஜம்மு காஷ்மீர் பகுதியளவு சட்டப்பேரவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு துணை நிலை ஆளுநர் பதவி இருக்கும். மேலும், மத்திய அரசின் கீழ் நேரடியாக செயல்படும் என்பதை துணைநிலை ஆளுநர் பதவி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளுநராக இருக்கும் சத்யபால் சாதிக் மீண்டும் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்பதால் புதிதாக துணைநிலை ஆளுநராக இரண்டு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
விஜயகுமார் ஐபிஎஸ் – மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த இவர் ஆளுநரின் ஆலோசராகவும் இருந்து வந்தார். தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் காவல்துறையில் பல்வேரு பொறுப்புகளில் இருந்துள்ளார். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பதற்கு இவரின் பங்கு முக்கியமானது.
காஷ்மீருக்கான மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியான தினேஸ்வரர் சர்மா என்பவரும் துணை நிலை ஆளுநர் போட்டியில் இருக்கிறார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…