உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில்பாஜக அமோக வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில், தர்மேந்திர பிரதான் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதி டேராடூன் செல்லவுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு மறுநாள் உத்தரகாண்டில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறலாம் என்றும், அதில் முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் பட்டியலில் புஷ்கர் சிங் தாமி, தன் சிங் ராவத், சத்பால் மகராஜ், ரிது கந்தூரி, கணேஷ் ஜோஷி உள்ளிட்ட பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன என கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் புஷ்கர் தாமி தோல்வியடைந்தாலும், பல எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். உத்தரகாண்டில், புஷ்கர் சிங் தாமிக்காக 6 எம்எல்ஏக்கள் தாங்கள் வென்ற இடங்களில் இருந்து ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக பாஜக தலைவர்களே கூறி வருகின்றனர். ஆனால், இறுதி முடிவை மத்திய தலைமைக் குழுதான் எடுக்க வேண்டும்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…