PM Modi Road show in Varanasi [Screenshot in Twitter/X Video]
வாரணாசி: பிரதமர் மோடி உத்திர பிரதேசம் மாநிலத்திற்கு நேற்று வந்திருந்த போது அவர் கார் மீது செருப்பு வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 18 2024) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பிஎம் கிசான் சமேலான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி எழுதும் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பின்னர் சாலை மார்க்கமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமரின் கார் வருவதை கண்ட பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் என பலர் இரு பக்கமும் பலத்த வரவேற்பு அளித்தனர்.
அந்த சமயம் பிரதமர் சென்ற கார் மீது ஓர் செருப்பு விழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியது. அந்த வீடியோவில் கார் மீது இருந்த செருப்பை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எடுத்து வேறு இடத்தில் தூக்கி எறிவது போல இருந்தது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…