WhatsApp: வாட்ஸ் அப்பில் பணப்பரிவர்த்தனை..மேலும் 6 கோடி பயனர்களுக்கு அனுமதி!

Published by
பாலா கலியமூர்த்தி

வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு.

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், கூகுள் பே, ஃபோன் பே, paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், வாட்ஸ் அப்பில், வாட்ஸ் அப் பே என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்த பின், டிஜிட்டல் பேமண்ட்ஸ் பயன்பாடுகள் மேலும் அதிகரித்தது.

அதன்படி, குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஏற்கனவே, 40 மில்லியன் (4 கோடி) பயனர்களுக்கு அனுமதிக்க NPCI என்ற யுபிஐ நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், வாட்ஸ் அப்பிற்கான (WhatsApppay) UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கூடுதலாக 60 மில்லியன் அதாவது 6 கோடி பயனர்களை அதிகரித்து நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் வாட்ஸ்அப் தனது 100 மில்லியன் (10 கோடி) பயனர்களுக்கு சேவையை விரிவுபடுத்த முடியும் என NPCI அறிவித்துள்ளது. NPCI என்பது இந்தியாவில் டிஜிட்டல் முறையில் சில்லறை கட்டணங்கள் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்குவதற்கான ஒரு அமைப்பாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில்லறை கட்டண முறைகளில் புதுமைகளைக் கொண்டுவருவதில் NPCI கவனம் செலுத்துகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 2008-இல் ஒரு அமைப்பாக இணைக்கப்பட்டது.

முழுமையான டிஜிட்டல் சமூகமாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோட்பாட்டை மேம்படுத்தும் வகையில், குறைந்த செலவில், நாடு தழுவிய அணுகலுடன் பாதுகாப்பான கட்டண தீர்வுகளை இது எளிதாக்குகிறது. இது இந்தியாவில் சில்லறை விற்பனை மூலம் பணம் செலுத்தும் முறையை மாற்றியுள்ளது. RuPay அட்டை, உடனடி கட்டண சேவை (IMPS), ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் போன்ற கட்டண தயாரிப்புகள் (UPI), பணத்திற்கான பாரத் இடைமுகம் (BHIM), BHIM ஆதார், தேசிய மின்னணு டோல் சேகரிப்பு (NETC) Fastag) மற்றும் பாரத் பில்பே ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

30 minutes ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

51 minutes ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

1 hour ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

1 hour ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

2 hours ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

2 hours ago