பிரதமர் மோடி என்ன செய்கிறார் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆறு வாரங்களில் 67 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி என்ன செய்கிறார் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை அடியோடு அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார். தானே உருவாக்கிய இந்த சுகாதார நாசத்தில் இருந்து தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, மாநிலங்களின் மீது சுமையை திணித்து உள்ளார்.
தற்போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி பணியை பிரதமர் மோடி தொடங்கவேண்டும். தொற்றால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏழைகளுக்கு பணமும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும். சென்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்த வேண்டும். பி.எம் கேர் நிதியை விடுவிக்கவேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ 35,000 கோடி தடுப்பூசிக்கு செலவிடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…