தடுப்பூசி போட்ட பின் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன நடக்கும்? எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

Published by
Rebekal
  • தடுப்பூசி செலுத்திய பின் கொரோனா ஏற்பட்டால் மரணம் நிகழாது என எய்ம்ஸ் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிடும் என தகவல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது புதிய தொற்றுகள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் மக்கள் கொரோனாவை அழிப்பதற்கான ஒரே தீர்வாக தடுப்பூசியை தற்பொழுது நம்பியுள்ளனர். எனவே, பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் மூன்றாவதாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும், தற்பொழுது மிகக் குறைவான இடங்களில் தான் இந்த  தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கான இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களும் கொரோனாவால் பாதிப்படைவதாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.

இந்த ஆய்வின் பின் எய்ம்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2 டேஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 நோயாளிகள் மற்றும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 நோயாளிகள் என மொத்தம் 63 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் 10 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், மீதமுள்ள 53 பேர் கோவாக்சின் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள். தடுப்பூசி போட்ட பின்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பாதிப்பின் அளவும், 5 முதல் 7 நாட்கள் வரை இந்த நோயாளிகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தடுப்பூசி போடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை போலவே தொற்றின் தாக்கம் இருந்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் கொரோனாவை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதால், மற்ற நோயாளிகளைப் போல உடல் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம் நிகழவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

13 minutes ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

27 minutes ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

1 hour ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

1 hour ago

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago