மாஸ்க் அணியாததால் ரூ.21.53 லட்சம் அபராதம் வசூலித்த மேற்கு ரயில்வே..!

Published by
murugan

கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா  தொற்றுநோய் தடுக்க முககவசம் அணியுமாறு அனைத்து மக்களையும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்னும் பலர் அரசுகளின் வார்த்தைகளை கேட்காமல் முககவசம் அணியாமல் வெளியில் செல்கின்றனர். இந்த சூழலில் முககவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியது.

முககவசம் அணியாவிட்டால் ரயிலில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதாக ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், முககவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 21.53 லட்சத்தை மேற்கு ரயில்வே வசூலித்தது. ஏப்ரல் 20 வரை 12,000 பேருக்கு அபராதம் விதித்ததாகக் கூறியது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 12,824 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 6,972 பேர் மார்ச் மாதத்தில் மட்டும் முககவசம் அணியாமல் பயணம் செய்தனர் என ரயில்வே தெரிவித்துள்ளது. அவர்களுக்கு ரூ.10,93,500 அபராதம் விதிக்கப்பட்டது. பிப்ரவரியில் முககவசம் அணியாமல் பயணம் செய்த 4,017 பேருக்கு ரூ.6,29,600 அபராதம் விதித்தனர்.

இந்த மாதத்தில் இதுவரை முககவசம் அணியாமல் பயணம் செய்த 1,835 பேருக்கு ரூ .4,30,500அபராதம் விதித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,924 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 351 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

26 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

39 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

55 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

58 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago