2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்கிறார் மேற்கு வங்க கவர்னர்!

Default Image

மேற்கு வங்க கவர்னர் தங்கார் 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது நடைபெற்ற வன்முறை குறித்து, மேற்கு வங்க கவர்னர் அவர்கள் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போதும் கவர்னர் ஜக்தீப் தங்கார் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை இவர் டெல்லி பயணம் மேற்கொண்ட போது மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்