பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரிக்கு மேற்கு வங்க சிஐடி போலீஸ் சம்மன்!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பாஜக எம்எல்ஏவும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை நடத்த மாநில குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், சுவேந்து அதிகாரி நாளை காலை சிஐடி போலீஸார் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க நந்திகிராம் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி சுப்ரபிரதா சக்கரவர்த்தி கடந்த 2018ம் ஆண்டு, தனது சர்வீஸ் ரிவால்வரை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.  சக்கரவர்த்தியின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக 11 போலீசார் உட்பட 15 பேரை சிஐடி இதுவரை விசாரித்த நிலையில், தற்போது சுவேந்து அதிகாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

14 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

23 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

32 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

40 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

47 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago