போதைப்பொருள் வழக்கில் போலீசாரை பணி செய்ய தடுத்ததற்காக தற்போது மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது இரண்டு மகன்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விறுவிறுப்பான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு கொல்கத்தா நகரில் உள்ள நியூ அலிப்பூர் எனும் பகுதியில் காரில் சென்ற பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா கோஸ்வாமி அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது கைப்பையில் இருந்த 100 கிராம் எடை கொண்ட கோகைன் எனும் லட்சக்கணக்கான மதிப்புள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கோஸ்வாமியையும் கைது செய்தனர். போதை பொருள் கடத்தலில் கோஸ்வாமி தொடர்ச்சியாக ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் தான் அதிரடியான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பின் அவருடன் சென்ற அவரது நண்பர் பிரதீப் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கோஸ்வாமி கார் நிறுத்தும் இடத்தில் உள்ள 8 வாகனங்களில் போலீசார் நடத்திய சோதனையின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வருகிற 25ஆம் தேதி வரை கோஸ்வாமிக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் மேற்கு வங்க பாஜக தலைவர் ராகேஷ் சிங் அவர்கள் குறுக்கீட்டு இந்த வழக்குக்கு எதிராக இடைக்கால தடை கேட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ளார். இதனையடுத்து போலீஸ் விசாரணையில் குறுக்கிட்டதற்காக மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது இரண்டு மகன்களை, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக கைது செய்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…