மம்தாவின் டிஎம்சியை வரவேற்கிறேன்.., பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கு தயார்! – திரிபுரா காங்கிரஸ் தலைவர் பிகே பிஸ்வாஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

திரிபுராவிற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வரவேற்கிறேன் என்று திரிபுரா காங்கிரஸ் தலைவர் பி.கே பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு பாஜகவுக்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

மம்தாவின் முயற்சி தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆளும் திரிபுராவின் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. திரிபுரா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவர் பிஜுஷ் காந்தி பிஸ்வாஸ், திரிபுராவில் பானர்ஜியின் டிஎம்சி மீண்டும் வருவதை வரவேற்றுள்ளார். ஆனால், காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல், இங்கு பாஜக ஆட்சிக்கு எதிராக டிஎம்சி ஆதிக்கம் செலுத்த முடியாது என கூறினார்.

மேலும், திரிபுராவில் காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, ​​கூட்டணி குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என்றும் காங்கிரஸ் தலைவராக (திரிபுராவில்) தோல்வியை உறுதி செய்ய பாஜக எதிர்ப்பு கட்சிகளும் ஒன்றிணைவதை நான் வரவேற்கிறேன் என குறிப்பிட்டார்.

பாஜகவை தோற்கடிக்க மக்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். 2024-இல் பாஜக ஆட்சிக்கு வராது. ஆனால், யார் தலைமை வகிப்பது? இந்த கட்சிகள் அனைத்தும் உண்மையாக இருந்தால் பாஜகவின் தோல்விக்கான கூட்டணிக்கு வரவேற்பதற்கு எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.

திரிபுராவில் கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் 40 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக குறைந்தது குறித்து பேசிய அவர், அப்போது கட்சித் தலைவர், எம்எல்ஏக்கள் உட்பட அனைத்து மூத்த தலைவர்களும் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தபோது கட்சியின் நிலை இதுதான் என குறிப்பிட்டார்.

2018-ல் காங்கிரசில் இருந்து ஒரு பெரிய படை பாஜகவில் இணைந்தது. ஆனால், இப்போது டிஎம்சிக்கு இதுபோன்ற ஒரு சம்பவத்தை செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இதுவரை டிஎம்சிக்கு இங்கு எந்த உள்கட்டமைப்பும் இல்லை, தொகுதி குழு இல்லை, மாநில குழு இல்லை, மாநில தலைவர் இல்லை என தெரிவித்தார்.

பாஜகவிற்கு ஒரு அமைப்பு இருந்தது, ஆனால் அவர்களால் எந்த தேர்தலிலும் இரண்டு சதவீத வாக்குகளை தாண்ட முடியவில்லை. காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களுடன் பெரும்பாலான தொண்டர்கள் பாஜகவில் இணைந்ததால், நிலைமை இதுபோன்று உள்ளது. ஆனால், அது TMC உடன் நடக்காது.

முன்பு கூட TMC இங்கு முயற்சித்தது, ஆனால் தோல்வியடைந்தது என்று கூறினார். மேலும், காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில், டிஎம்சி உண்மையுள்ளவர்களாகவும், உண்மையில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பினால், நான் அதை வரவேற்கிறேன் எனவும் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

2 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

1 hour ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago