வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு ரூ.30,600 கோடி வரை உத்தரவாதம் என நிதியமைச்சர் தகவல்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளில் வாராக்கடன் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆர்சிஎல்) வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு ரூ.30,600 கோடி உத்தரவாதம் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடன்களுக்கான ஒப்புதல் மதிப்பில் 15 சதவிகிதம் வரை என்ஏஆர்சிஎல் பணம் செலுத்தும், மீதமுள்ள 85 சதவிகிதம் அரசு உத்தரவாத பாதுகாப்பு ரசீதுகளாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 2018 ம் ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போது 2 வங்கிகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…