கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என்று மறைந்த கர்நாடக ஒப்பந்ததாரரின் குடும்பம் கோரிக்கை.
கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் ஈஸ்வரப்பா, பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகாவில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் பிரசாந்த் பாட்டீல், எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களைக் கைது செய்யாத வரை அவரது உடலை குடும்பத்தினர் எடுத்துச் செல்ல மாட்டார்கள் என்று கூறியுள்ளார். கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, பசவராஜ், ரமேஷ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தற்கொலைக் குறிப்பில், பாட்டீல் தனது மரணத்திற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என்றும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…