துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம்- விவசாயிகள் ..!

Published by
murugan

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 2 மாதங்களாக போராடிவருகின்றனர். கடந்த 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து  ஏறக்குறைய 5 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நடந்தது சம்பவம் போன்று உத்தரபிரதேசத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்க்காக உத்தரபிரதேச அரசு காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகள் அகற்ற முடிவு செய்தது. ஆனால், காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அந்த இடத்தை காலி செய்யுமாறு உத்தரபிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால், உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு பாரதிய கிசான் யூனியன் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், நாங்கள் எங்கையும் போகமாட்டோம் இங்குதான் இருப்போம், போலீசார் என்ன நடவடிக்கை வேண்டுமெனலும் எடுத்து கொள்ளட்டும், போராட்டத்தை கலைக்கமுடியாது என தெரிவித்தார். மேலும், மூன்று விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை பல விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தொடர வேண்டும் என கூறினார்.

நாங்கள் லாத்தி அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று ஒரு விவசாயி கூறினார். தற்போது காசிப்பூர் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

9 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

9 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

10 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

11 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

12 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

13 hours ago