நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 8 பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு கடந்த 2013-ம் ஆண்டு, பிப்ரவரி 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதே நாளில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 2001-ல் இந்த நாளில் எங்கள் பாராளுமன்றத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். பாராளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…