ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்!

Default Image

தமிழகத்தில் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் குடுக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் பொது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு திட்டத்தையும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்றும் அதனை செயல்படுத்த விடமாட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட்கள் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் என்று பிரிந்து இருப்பது  வெறும் பெயரளவில் தானே தவிர அனைத்து போராட்ட நிகழ்வுகளிலும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்