முதல்வர் பதவி தான் எங்களுக்கு வேண்டும்- அடம்பிடிக்கும் சிவசேனா

Default Image

மகாராஷ்டிராவில் புதிய முதல்வர்  சிவசேனாவை  சேர்ந்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில்  பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜ 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
தேர்தல் முடிவில் பாஜக  105 தொகுதிகளிலும்,சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.  சிவசேனா தரப்பில்  50-50 பங்கீடு என்ற உடன்படிக்கையின்படி இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக்க பாஜகவிடம் தெரிவித்தது.மேலும் பிரதமர் மோடியும் தேவேந்திர பத்னாவிஸ்தான் மீண்டும் முதலமைச்சர் என்று தெரிவித்தார்.தேவேந்திர பத்னாவிஸும்  முதல்வர் நான்தான் என்று கூறிவருகிறார். .இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் தனியாக ஆட்சியை அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.அதிலும் முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் புதிய முதல்வர்  சிவசேனாவை  சேர்ந்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.மேலும் இதைத்தான் மக்கள் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்