Congress MP KC Venugopal [File Image]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மக்களவை சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளரை ஒரேமனதாக தேர்வு செய்ய அக்கட்சி முயற்சி செய்தது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில், NDA கூட்டணி சார்பாக ஓம் பிர்லாவும், I.N.D.I.A கூட்டணி சார்பாக கே.சுரேஷும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” துணை சபாநாயகர் பொறுப்பை எதிர்கட்சிக்கு அவர்கள் (NDA) கூட்டணி தர சம்மதம் தெரிவித்தால் நாங்கள் NDA கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு எங்கள் ஆதரவை தருகிறோம். நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
சபாநாயகர் விவகாரத்தில் எதிர்கட்சியையும் பாஜக கௌரவிக்க வேண்டும். இது தொடர்பாக முதலில் ராஜ்நாத் சிங் , மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து பேசினார் என்று சபாநாயகர் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறினார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…