மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, மகன் திருமணத்தை ஒத்திவைத்த போலீஸ் அதிகாரி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் ஒருபக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாகவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், மக்களை காக்கும் பணியில், மருத்துவர்கள் மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரிகளும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் டெல்லியை சேர்ந்த போலீஸ் ஏ.எஸ்.ஐ. ராகேஷ் குமார் அவர்கள், டெல்லியில், லோதி சாலையில், கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நன் இதுவரை கிட்டத்தட்ட 1,100 பேருக்கு உதவி செய்துள்ளேன். இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். இங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, எனது மகளின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளேன்.’ என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …